தமிழத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்
அட்மின் மீடியா
0
தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்துள்ளதால் நீலகிரி, கோயம்புத்தூா், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிக கனமழையும்
திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும்,
ஈரோடு, திருப்பூா், விருதுநகா், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்