காந்தமாக மாறிய கை... இரும்பு பொருட்கள் தானாக கையில் ஓட்டுகிறது..காரணம் என்ன? வீடியோ
அட்மின் மீடியா
0
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் உள்ள சிட்கோ பகுதியில் வசித்து வரும் அரவிந்த் சோனார் வயது 71 என்பவர், உடலில் இரும்பு பொருட்கள் எல்லாம் ஒட்டிகொள்கின்றது
கடந்த மார்ச் 9ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார். அதன் பின் கடந்த 2ஆம் தேதி இரண்டாவது டோஸ் போட்டுள்ளார். தடுப்பூசி போட்ட பின்பு தான் அவரது உடலில் இரும்பு பொருட்கள் ஒட்டுகின்றது உடலுக்கு என்ன ஆனது என தெரியவில்லை என்று நாசிக் முனிசிபல் கார்பரேஷனிற்கு தகவல் அளித்தார்கள் அதன் பின்பு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆய்வு முடிவு வந்த பிறகுதான் இதற்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும். என்று கூறினார்கள் மேலும்
உடலில் இரும்பு பொருட்கள் ஓட்டுவது என்பது கட்டாயம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. காந்த சக்திக்கு மட்டுமே இரும்பு பொருட்கள் ஒட்டும் நிலையில் உடம்பில் ஓட்ட என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும். தற்போது உள்ள அறிவியல் படி இது சாத்தியமில்லை. ஆனால் இதற்கும் அவர் தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கும் சம்மந்தம் இருக்காது என கூறியுள்ளனர்.
SOURCE:
வீடியோ பார்க்க
Tags: இந்திய செய்திகள்