Breaking News

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்: தமிழக முதல்வர் நாளை ஆலோசனை

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.



தமிழகத்தில் கொரானா பரவல் காரணமாக  தமிழகத்தில் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டது.அதன்பிறகு  தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு வருகின்றது. தற்போது  மாவட்டங்கள் 1, 2, 3 என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் வகையில் இருக்கும் 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படவில்லை. வகை 2, வகை 3 இருக்கும் மாவட்டங்களுக்குத் தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தன.

தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு  ஜூன் 28ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

இந்நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.இந்த கூட்டத்தில் மருத்துவக் குழுவினர், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.


அடுத்த ஊரடங்கில் ஜவுளிகடை, நகைகடை, மால்கள், வழிப்பாட்டுதளங்கள் ஆகியவை திறக்க வாய்ப்பு உள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback