தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு" இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு நாளை மறுதினத்துடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழுஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது குறைவான நேரம் கடைகள் திறப்பது உள்ளிட்ட சில தளர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 10 ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் வேகமாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்று குறைந்து வரும் இடங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும், தொற்று குறையாத இடங்களில் கூடுதல் கட்டுப்பாடும் விதிக்கப்படும் என்று தெரிகிறது.
Tags: தமிழக செய்திகள்