Breaking News

ஜூன்.21 தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு தளர்வுகள் முழு விவரம்

அட்மின் மீடியா
0
ஜூன் 21ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு




கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் சானிடைசர்  கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். 

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். 

அனைத்து கடைகளும், குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது. 

கடைகளில் காத்திருக்கும் போது, சமூக இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.


கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கூடுதலாக கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் 14.6.2021 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.


தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதிக்கப்படும். 

மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவார்கள். கடைகள் திறக்க அனுமதியில்லை. 

மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம். 

வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்லலாம். மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க வேண்டும். 

வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம். 

கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். 

மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். 

ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும். 

மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களைத் தவிர, நோய்த்தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி...

1. அழகு நிலையங்கள், முடிதிருத்தும் நிலையங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படலாம். 

2. பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் காலை 6 மணி முதல் 9 மணிவரை திறக்கப்படும்.

3. வேளாண் உபகரணங்கள், பம்ப்செட்கள் பழுது நீக்கும் கடைகள் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும். 

4. கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.

5. மண்பாண்டம், கைவினைப் பொருட்கள் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 

6. வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்கும் கடைகள் பிற்பகல் வரை  பிற்பகல் 2 மணிவரைசெயல்படலாம். 

7. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படலாம். 

8. செல்போன் மற்றும் அவை சார்ந்த விற்பனை நிலையங்கள் பிற்பகல்வரை  பிற்பகல் 2 மணிவரைசெயல்படலாம். 

9. கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பிற்பகல் வரை  பிற்பகல் 2 மணிவரைசெயல்படலாம். 

10. டிவி, பிரிட்ஜ் போன்ற வீட்டுபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும்  பிற்பகல் 2 மணிவரைகடைகள் பிற்பகல் வரை செயல்படலாம். 

11. பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகள் அனுமதிக்கப்படும். 

12. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அல்லது பத்து பேர் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். 

13. தொழிற்சாலைகளில் பணிகளுக்குச் செல்வோர் முன்பு நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது. அவர்கள் தற்போது இ - பதிவுடன் பணிக்குச் சென்று வரலாம்.


நீடிக்கும் தடை முழு விவரம்:


வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தொடர்ந்து தடை நீட்டிப்பு


பொது போக்குவரத்திற்க்கு தடை

சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தடை நீட்டிப்பு


டீக்கடைகள் திறக்க அனுமதி இல்லை

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி இல்லை. 

உடற்பயிற்சி கூடங்கள் திறக்க தடை. 

நீச்சல் குளங்களுக்கு அனுமதி இல்லை.பொது போக்குவரத்திற்கு அனுமதி இல்லை

தமிழக அரசு அறிவிப்பு 








 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback