11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 30 வரை அவகாசம்: தமிழக அரசு
அட்மின் மீடியா
0
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
கொரானா காரணமாக ஊரடங்கில் எந்த வித தளர்வுகளும் அளிக்கப்படாத கோயம்புத்தூா், நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், கரூா், நாமக்கல், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் ஜூன் மாதத்துக்கான கட்டணத்தை முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி ஜூன் 30 வரை வசூலிக்க மின்வாரியம் அனுமதியளித்துள்ளது.
மேலும் ஜூன் 15 முதல் ஜூன் 30 மின்கணக்கீடு செய்ய வேண்டிய மின்நுகர்வோர்கள், 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கணக்கீடு செய்யப்பட்ட தொகையை கட்ட வேண்டும் என மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஜூன் 2019 மாதக் கட்டணம் கூடுதலாக இருப்பதாக கருதுபவர்கள் ஏப்ரல் மாதத்துக்கான 2021 கணக்கீட்டுப்படி உத்தேச மின் கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்