1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளியில் சேர டிசி தேவையில்லை: பள்ளிகல்விதுறை
அட்மின் மீடியா
0
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது 8-ஆம் வகுப்பு வரை மாற்றுச் சான்று இல்லாமல் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்ந்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை கடந்த 14 -ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது.
மேலும் 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளியில் சேர மாற்றுசான்றிதழ் கட்டாயமில்லை
கட்டாய கல்வி சட்டத்தின்படி அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படுவதால் தனியார் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மாற்றுச் சான்று இல்லாமலேயே அரசுப் பள்ளிகளில் அவர்கள் படிக்க வேண்டிய வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம்.
மாணவர் சேர்க்கையின்போது ஆதார் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும். கல்வி மேலாண்மை தகவல் முகமையில் அந்த எண்ணை பயன்படுத்தி மாணவர்கள் ஏற்கனவே படித்த பள்ளிவிவரம் மாற்று சான்றிதழ் விவரம் பெற்றுக் கொள்ள முடியும். எனவே அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களை சேர்க்க மாற்றுச் சான்று ஏதும் தேவையில்லை.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்