JIO : அதிரடி சலுகை! கொரோனா காலத்தில் ரீசார்ஜ் பண்ணாமலே இலவசமாக பேசலாம்..
கொரோனா பெருந்தொற்று காலத்தில் அடித்தட்டு மக்களுக்கு உதவிடும் வகையில் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்கள் இலவச அழைப்புகள் மேற்கொள்ளும் வகையில் அதிரடி சலுகையை ஜியோ அறிவித்துள்ளது.
ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு அட்டகாசமான சலுகைகளை அறிவித்துள்ளது அதன்படி
முதல் ஆஃபர்.
ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 300 நிமிடங்கள் இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
இரண்டாவது ஆஃபர்.
ஜியோபோன் வாடிக்கையாளர்கள் எந்தவொரு ரீசார்ஜ் திட்டத்தை வாங்கினாலும், கூடுதலாக அதே மதிப்பிலான பிளான் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
அதாவது ஒவ்வொரு ரீசார்ஜ் திட்டத்தையும் வாங்கும் போது அதே மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தை இலவசமாக வழங்கப்படும். அதாவது 100 ரூபாய்க்கு ஜியோபோன் வாடிக்கையாளர் ரீசார்ஜ் செய்தால், அவருக்கு கூடுதலாக 100 ரூபாய்க்கு இலவச ரீசார்ஜ் வழங்கப்படும்.
Jio ensures that JioPhone users stay connected during the pandemic. #JioPhone #JioTogether #CoronaHaaregaIndiaJeetega #DigitalLife #RelianceJio pic.twitter.com/HO26wITiQC
— Reliance Jio (@reliancejio) May 14, 2021
Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்