Breaking News

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி IAS நியமனம்

அட்மின் மீடியா
0

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் புதிய ஆணையராக ககன்தீப் சிங் பேடி IAS நியமனம் செய்யப்பட்டுள்ளார். 



இதற்கான உத்தரவை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

தமிழக முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Cheif Minister MK Stalin) பதவியேற்ற நாள் முதல் பல அதிரடிகளை செய்து வருகிறார். அந்தவகையில் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும் பதவி ஏற்ற மு. க. ஸ்டாலின் அவர்கள் அன்றைய தினமே தமிழக முதல்வரின் தனி செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கப்பட்டனர். அது போல் தமிழக தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

ககன் தீப் சிங் பேடி கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியுள்ளார். தற்போது தமிழக வேளாண் துறை முதன்மை செயலாளராக உள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback