ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டுபிடிக்கும் புதிய கருவி..! சிங்கப்பூர் அரசு ஒப்புதல்
அட்மின் மீடியா
0
கொரோனா ஒருவருக்கு இருக்கிறதா இல்லையா என்பதை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்கும் புதிய கருவிக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது
கடந்த ஆண்டு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மூச்சுக்காற்று வழியாக ஒருவருக்கு கொரோனா இருப்பதை கண்டுபிடிக்கும் புதிய கருவியை கண்டுபிடித்தார்கள்.இந்த புதிய கருவிக்கு breathonix என்று பெயர் வைக்கபட்டுள்ளது
இந்த கருவியை பயன்படுத்துபவர், இதில் உள்ள சிறிய குழாயை வாயில் வைத்து மூச்சுக்காற்றை ஊத வேண்டும். பின்னர் மூச்சுக்காற்று உள்ளே சென்று காற்றில் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை ஒரு நிமிடத்தில் தெரிவித்துவிடும்.
இந்த கருவியை வைத்து கொரானா பரிசோதனை செய்ய சிங்கப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்
