பொதுமக்களிடம் காவல் துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்: டிஜிபி திரிபாதி அறிவுரை
அட்மின் மீடியா
0
நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ள நிலையில் பொதுமக்களிடம் காவல் துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என காவல்துறையினருக்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி அறிவுரை வழங்கியுள்ளார்.
கொரோனா முழு ஊரடங்கு நாளை அமல்படுத்தப்படுவதையொட்டி காவல்துறையினரின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த காவல்துறை, தலைமை இயக்குனரும் சட்டம்- ஒழுங்கு டிஜிபி திரிபாதி அறிவுரைகள் வழங்கி சுற்றறிக்கை ஒன்றை காவல்துறையினருக்கு அனுப்பி உள்ளார் அதில் எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ மக்களிடம் நடந்து கொள்ளக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்