மே 10 முதல் மெட்ரோ ரயில் சேவை ரத்து
அட்மின் மீடியா
0
சென்னையில் மெட்ரோ ரயில்கள் மே 10 முதல் 24 வரை பொதுமுடக்கத்தின் போது இயங்காது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக மே 10 முதல் 24 வரை தமிழகத்தில் முழுப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமுடக்க காலத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளை(மே 9) மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும், காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்