Breaking News

BREAKING: தேர்தலில் வாக்களிக்க 80 வயது மேற்பட்டோர் மாற்றுதிறனாளிகளுக்கு இலவச வாகன வசதி அறிவிப்பு..!

அட்மின் மீடியா
0

தேர்தலில் வாக்களிக்க 80 வயது மேற்பட்டோர் மாற்றுதிறனாளிகளுக்கு இலவச வாகன வசதி அறிவிப்பு..!

 


தமிழகத்தில் ஏப்ரல் 6 ம்தேதி அன்று  சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள்  மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்களிக்க  வாக்குச்சாவடிக்கு சென்று மீண்டும் வீடு திரும்புவதற்கு இலவச வாகன சேவையை  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது 

 


இந்த சேவையை சென்னை திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் உபர் நிறுவனம் வழங்க உள்ளது.இந்த சேவைக்கு உபர் செயலி Uber App மூலம்  முன்பதிவு செய்ய வேண்டும்

மேலும் இந்த இலவச சவாரியானது குறைந்தபட்சம் 5 கி.மீ தூரத்திற்குட்பட்டு பயண கட்டண அளவில் ரூ 200 வரை 100 சதவீதம் கட்டண தள்ளுபடியுடன் அளிக்கப்படும்.

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback