உயர்நீதிமன்றங்களில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்குகள் விசாரணை
அட்மின் மீடியா
0
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வருகிற 23ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வருகிற 23ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்குகள் விசாரணை நடைபெறும்
மேலும் வழக்கறிஞர் அறைகள், வழக்கறிஞர் சங்க அறைகள் மற்றும் நூலகங்களை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மறு அறிவிப்பு வருகிற 22ஆம் தேதி வெளியாகும் எனஎன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அறிவித்துள்ளார்
அதிகாரபூர்வ அறிவிப்பு படிக்க
Tags: தமிழக செய்திகள்