குரானில் 26 வசனங்களை நீக்க வழக்கு அபராதம் விதித்து தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
அட்மின் மீடியா
0
உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஷியா பிரிவு முஸ்லிம் தலைவர் வசீம் ரிஜ்வீ உச்ச நீதிமன்றத்தில்தாக்கல் செய்த மனுவில்
முஸ்லிம்களின்
புனிதக் குர்ஆனின் 26 வசனங்களை நீக்க வேண்டும்’’ எனக் கோரி உள்ளார். இவை
முஸ்லிம்கள் இடையே தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்
இவ்வழக்கு நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனு அடிப்படையிலேயே மிகவும் அற்பமானது என கோவத்துடன் கருத்து தெரிவித்த நீதிபதி நாரிமன் அவர்கள் மனுவைத் தள்ளுபடி செய்தார். அத்துடன், மனுதாரருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி