தமிழகத்தில் வழிபாட்டுதளங்களுக்கு இரவு 10 மணி வரை அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வழிபாட்டுதளங்களுக்கு இரவு 10 மணி வரை அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 10 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதேபோல் புதுச்சேரியிலும் இரவு 10 மணி வரை வழிபாட்டு தலங்களை திறக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும் வழிபாட்டு தலங்களில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்