Breaking News

உலகம் முழுவதும் நள்ளிரவில் திடிரென பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் திடீர் செயலிழப்பு

அட்மின் மீடியா
0

உலகின் பல்வேறு நாடுகளிலும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்சேவை முடங்கியது. திடீரென முடங்கியதால், தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியாமல் பயனர்கள் தவித்தனர் 

உலக அளவில் நேற்று வெள்ளிக்கிழமை இந்திய நேரம் இரவு 11 மணிக்குப் பிறகு வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களின் வேகம் கடுமையாக குறைந்ததாக அதன் பயனர்கள் பரவலாக தெரிவித்துள்ளனர். 



மீண்டும் சுமார் 1 மணி நேரத்திற்க்கு பிறகு நள்ளிரவு முதல்  வாட்ஸ் சேவை இயங்கத் தொடங்கின. இதனால் அவற்றின் பயனாளர்கள் நிம்மதி அடைந்தனர். 

வாட்ஸ்அப் ஐ தொடர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் வலைதளங்களும் சீராகியதுவாட்ஸ்அப் செயலி முடக்கம் குறித்து அந்நிறுவனம் சார்பில் இதுவரை அதிகாரபூர்வமான தகவல்கள் எதையும் தெரிவிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப் முடங்கியது குறித்து அந்நிறுவனம் .இதற்கான காரணம் என்னவென்று கூறவில்லை, ஆனால் பிரச்சனை சரிசெய்யபட்டுவிட்டது என்று மட்டும் கூறியுள்ளது 

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback