Breaking News

அரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா திடீர் அறிவிப்பு.

அட்மின் மீடியா
0
நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்தனை செய்வேன். என சசிகலா அறிக்கை  வெளியிட்டுள்ளார் , அவர் அறிக்கையில்,

 



நான் என்றும் வணங்கும் என் அக்கா ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.


நான் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன். நான் என்றும், பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் நன்றியுடன் இருப்பேன்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரின் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேன். ஜெயலலிதா ஆட்சி தொடர உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றவேண்டும். 

நம் பொது எதிரி திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபட வேண்டும். என்மீது அன்பும் அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.



000000000000

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback