Breaking News

சசிகலா அரசியலை விட்டு விலகியது ஏன்?- டிடிவி தினகரன் விளக்கம் !!

அட்மின் மீடியா
0

இன்று சசிகலா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தான்  அரசியலை விட்டே ஒதுங்குவதாக அறிவித்துள்ளார்

சசிகலா அவர்கள்  அறிக்கையில் 

'நான் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன். நான் என்றும், பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் நன்றியுடன் இருப்பேன் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் செய்திளார்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் 

அரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டது எனக்கு சோகமாக உள்ளது. எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்களே என்பதாலே அப்படி கூறியிருக்கிறார்கள் மேலும் தான் ஒதுங்கி இருந்தால்தான் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என நினைத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். தான் ஒரு பேசுபொருளாக இருக்க சசிகலா விரும்பவில்லை என்பதால் ஒதுங்க முடிவு செய்துள்ளார்  என டிடிவி தினகரன் கூறினார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback