தமிழகத்தில் முழு ஊரடங்கு கிடையாது !! வதந்திகளை நம்பாதீர்கள்: சுகாதாரத்துறை செயலாளர் பதில்!
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட மாட்டாது. பாதித்த பகுதிகளில் மட்டும் மினி ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவெடுத்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.
இன்று தனியார் தொலைகாட்சி நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள்
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த மாட்டாது. மினி ஊரடங்கு அமல்படுத்தப்படும். கொரோனா பாதித்த தெருக்கள், வீடுகள் உள்ள பகுதிகளில் மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும். முழு ஊரடங்கு என யூகத்தில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம்.தமிழகத்தில் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள், வென்டிலேட்டர்கள், மருந்துகள், தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளது. பொது மக்கள் தடுப்பூசியும் போட்டு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags: தமிழக செய்திகள்