Breaking News

ஆன்லைன் திருட்டை தடுக்க ரிசர்வ் வங்கி புது வழிமுறை

அட்மின் மீடியா
0

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களின் திருட்டைத் தடுக்கும் விதமாக ஆர்.பி.ஐ புதிய வழிமுறைகளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.


நாம் ஆன்லைனில் ஏதாவது ஷாப்பிங் செய்யும் போது முதல் முறை நம் ஏடிஎம் கார்டு விவரங்களை அளிப்போம் ,அந்த வளைதளங்கலிலும் அந்த கார்டு சேமித்து வைத்துகொள்ளும் நாம்  அடுத்த முறை ஷாப்பிங் செய்யும்போது OTP எண்களை மட்டுமே பதிவு செய்து ஷாப்பிங் செய்து வழக்கம்.

பொதுவாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனையின் போது அந்த வலைதள நிறுவனங்கள், கார்டு விவரங்களை சேமித்து வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா என்று கேட்கும், நாமும் ஆம் என்று கொடுத்து விடுவோம்.அப்படி என்றால் அடுத்த முறை பணப்பரிவர்த்தனை செய்யும் போது 16 இலக்க எண்ணை டைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கார்டு வேலிடிட்டி, சிவிவி நம்பர் கொடுத்தால் போதுமானது. ஓடிபி வரும் அதனை மட்டும் பதிவு செய்து நம்  பரிவர்த்தனையை முடித்துவிடலாம்.


ஆனால் இனி ஒவ்வொரு முறை ஷாப்பிங் செய்யும்போதும், ஏ.டி.எம். கார்டில் இருக்கும் 16 இலக்க எண்கள், பெயர் மற்றும் கார்டு காலாவதியாகும் தேதி என அனைத்து விவரங்களையும் புதிதாக பதிவு செய்ய வேண்டும் .. இதன் மூலம் ஆன்லைன்ட கார்டு மோசடியை தடுக்க முடியும் என்கிறது ஆர்பிஐ. இந்த நடைமுறை ஜூலை மாதம் அமலுக்கு வரும் என்று தெரிகின்றது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback