9, 10, 11ம் வகுப்பு மாணவர்களின் ஆல்-பாஸ் உத்தரவை ரத்து செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றதாக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய மறுத்த சென்னை ஐகோர்ட்டு, 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தனி தேர்வு நடத்திக் கொள்ள தனிப்பட்ட பள்ளிகளுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை கடந்த பிப்.25-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இதை ரத்துசெய்யக் கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது நீதிபதிகள் இதுதொடர்பான அரசாணையை ரத்து செய்ய முடியாது என தெரிவித்தனர்.அதேசமயம், 10-ம் வகுப்பில் இருந்து 11-ம் வகுப்புக்கு செல்லும்மாணவர்கள், தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பாடத்திட்டத்தை தேர்வுசெய்யும் வகையில், அவர்களின் தகுதியைக் கண்டறிய பள்ளிகள்அளவில் தேர்வு நடத்திக் கொள்ளலாம் எனவும், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை உரிய வழிகாட்டி விதிமுறைகளை அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்