இன்று முதல் 4 நாட்களுக்கு வங்கி செயல்படாது
அட்மின் மீடியா
0
ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பொதுத் துறை வங்கிகளில் 4 நாட்களுக்கு பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம் ஆக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச்15, 16-ம் தேதி களில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று 2-வது சனிக்கிழமை,
நாளை ஞாயிறு என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை.
அடுத்த 2 நாட்களுக்கு வேலைநிறுத்தம் நடக்க உள்ளதால், இன்று முதல் 16-ம் தேதி வரை 4 நாட்கள் பொதுத் துறை வங்கிகள் செயல்படாது.
Tags: தமிழக செய்திகள்