Breaking News

மின்வாரியத்தில் புதிய கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதி

அட்மின் மீடியா
0

தமிழக மின்வாரியத்தில் புதிய கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

 


தமிழக மின்வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை கடந்த ஆம் ஆண்டு மின்வாரியம் வெளியிட்டது.

இதனை எதிர்த்து மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.இந்த வழக்கில் பலகட்ட விசாரனைக்கு பிறகு  இன்று உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில்,

தமிழக மின்வாரியத்தில் புதிய கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் புதிதாக கேங்மேன் நியமிக்கப்பட்டாலும் ஒப்பந்த பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback