Breaking News

9, 11-ம் வகுப்புக்கு நாளை பள்ளிகள் திறப்பு, அனுமதி கடிதம் கட்டாயம்

அட்மின் மீடியா
0

பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயமாக பெற்றோரிடம் அனுமதி கடிதத்தை பெற்று வர வேண்டும் என கல்வித் துறை தெரிவித்துள்ளது



தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் பிப்ரவரி மாதத்திற்கான ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. 

அதில், வரும் பிப்.8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படும் என தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் கல்வித் துறை தெரிவித்துள்ளது இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், " பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோர் அனுமதி கடிதத்துடன் வர வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback