திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்! ABP C-Voter கருத்துக் கணிப்பில் அதிரடி முடிவு!!
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என ஏபிசி சி-வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்றும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் ஆனையம் அறிவித்துள்ளது மேலும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருக்கும் அதிமுக அதனை தக்க வைக்குமா, பாஜக தமிழகத்தில் காலூன்றுமா, திமுக வெற்றி பெற்று அதிரடி காட்டுமா என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் நிலவி வருகின்றது
இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.ஒவ்வொரு முறையும் தேர்தல் கருத்துக் கணிப்பை நடத்தும் ஏபிசி சி-வோட்டர் நிறுவனம் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.
அதன்படி 2021 சட்டமன்ற தேர்தலில்
திமுக கூட்டணிக்கு
154 முதல் 162 இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணிக்கு
58-66 இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றும்,
மக்கள் நீதி மய்யம்
2 முதல் 6 தொகுதிகளும்,
அமமுக
1 முதல் 5 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும்
ஏபிசி சி-வோட்டர் நிறுவனம் கணித்துள்ளது
.
Source:
Tags: தமிழக செய்திகள்