பட்ஜெட்: குடும்ப தலைவர் விபத்தில் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
குடும்ப தலைவர் விபத்தில் மரணமடைந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதில் புதிய அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் எல்ஐசி மற்றும் யுனைடெட் காப்பீடு இந்தியா திட்டத்துடன் இணைந்து ஏழை மக்களுக்கு புதிய ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு திட்டம் தொடங்கப்படும்.
இதற்கான தொகையை தமிழக அரசே ஏற்கும் என கூறப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் குடும்பங்களுக்கு குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் குடும்ப தலைவர் விபத்தில் மரணமடைந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்