#Breaking : 11-ம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம் !
தமிழகத்தில் வரும் 11-ம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் 11-ம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது
சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்