தபால்துறை தேர்வுகளை தமிழில் எழுதலாம்; மத்திய அரசு அறிவிப்பு!
தபால்துறையில் உள்ள கணக்காளர் பணிகளுக்கான தேர்வை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தபால் துறையில் உள்ள கணக்காளர் பணிகளுக்கான தேர்வுகள் நாடு முழுவதும் வரும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக வெளியிடப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தேர்வு எழுத ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தது.
தமிழ் மொழியில் தேர்வு எழுத முடியாததால் இதற்கு தமிழகத்தில் கடும் எதிப்பு கிளம்பியது.இந்நிலையில் தபால்துறை கணக்காளர் தேர்வை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது.
PO & RMS Accountant Exam by Department of Posts scheduled on 14th February , 2021 will be conducted in Tamil language as well, in Tamil Nadu Circle. Candidates pertaining to Tamil Nadu Circle can now write the exam in English/ Hindi/ Tamil.
— India Post (@IndiaPostOffice) January 14, 2021