தனிப்பட்ட தகவல்கள் வெளியிட மாட்டோம் என ஸ்டேட்டஸ் வைத்து வாட்ஸ்ஆப் விளக்கம்
வாட்ஸ் ஆப் தன் பயனாளிகள் குறித்த தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்போவதாக புதிய கொள்கையை வாட்ஸ் ஆப் சமீபத்தில் அறிவித்தது.
மேலும் பிப்., 8ம் தேதிக்குள் அந்த கொள்கையை ஏற்காவிட்டால் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாது என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் பலரும் வேறு செயலிகளுக்கு மாறி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்
அதையடுத்து புதிய கொள்கையை அமல்படுத்துவதை மே 15 வரை ஒத்திவைக்கின்றோம் என வாட்ஸப் நேற்று அறிவித்தது
மேலும் வாட்ஸப் இன்று தனது பயனர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளது.
இது அனைத்து பயனர்களும் பார்க்கும் வகையில் உள்ளது அதில் உங்களது குறுஞ்செய்தி, இருப்பிடம், உள்ளிட்ட எந்த தனிப்பட்ட தகவல்கள் கண்காணிக்கப்படவோ, வெளியிடப்படவோ மாட்டாது. உங்களின் தொடர்பு எண்களை பேஸ்புக்குடன் பகிர மாட்டோம்,' என ஸ்டேட்டசில் விளக்கம் அளித்துள்லது வாட்ஸ்ப்
Tags: தொழில்நுட்பம்