சசிகலா விடுதலை ஆகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு !!
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் அக்ரஹார சிறையில் தண்டனை பெற்று வரும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரும் 27 ஆம் தேதி காலை பத்து மணிக்கு விடுதலை செய்யப்படவுள்ளார் என கர்நாடக சிறைத்துறை அறிவித்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்குத்தொடர்பாக சசிகலா அவரது உறவினராக இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் வழக்கில் பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு அவர்களுக்கு 4 ஆண்டு காலத் தண்டனை விதிக்கப்பட்டது.இவர்களுக்கான தண்டனை பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் சசிகலா வரும் 27 ஆம் தேதி காலை பத்து மணிக்கு விடுதலை செய்யப்படவுள்ளார் இதுகுறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா அவர்கள் சசிகலா அவர்கள் வரும் 27ம் தேதி காலை வெளிவருகிறார். இதற்கான அதிகாரபூர்வ இ-மெயில் மூலம் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து எனக்கு வந்துள்ளது
அதில், காலையில் சசிகலா வெளியில் வருவார் என்று கூறப்பட்டுள்ளது. காலை என்பது 10 மணியளவில் என்று நினைக்கிறேன். இதையடுத்து சசிகலாவை 27ம் தேதி காலை சிறையிலிருந்து அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
Tags: தமிழக செய்திகள்