இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
இங்கிலாந்தில் புதிய கொரோனா காரணமாக மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் புதிய கொரோனா பரவல் காரணமாக மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் மீண்டும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் கடைபிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் இந்த ஊரடங்கிற்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு ஆறு வாரங்களுக்கு நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. இன்று நள்ளிரவு முதல் அமலான ஊரடங்கால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெறும்
மேலும், இங்கிலாந்து மக்கள், வீட்டிலேயே பத்திரமாக இருக்க வேண்டும் எனவும், இந்த ஊரடங்கு புதிய வகை கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் என நம்பிக்கையுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்
Tags: வெளிநாட்டு செய்திகள்