தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை.!
ஜனவரி 5 ம்தேதி தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும்,
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,
ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை
Tags: தமிழக செய்திகள்