குமரி அருகே உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை - 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அட்மின் மீடியா
0
லட்சத்தீவு, கன்னியாகுமரி இடையே காற்றழுத்த தாழ்வு நிலை நிலைகொண்டுள்ளதாகவும் இதனால் தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்