Breaking News

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0



மாலத்தீவு பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், 



தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.  வடகிழக்கு பருவமழை ஆனது தென் மாநிலங்களில் இருந்து வருகின்ற 19-ம் தேதி விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


http://www.imdchennai.gov.in/

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback