அதிரடி அறிவிப்பு! மலேசியாவில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு!!
அட்மின் மீடியா
0
மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அவசர நிலை பிரகடன செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்த நிலையில் 2 வார கால லாக்டவுனை பிரதமர் முஹீதின் யாசின் நேற்று அறிவித்திருந்தார்.
இந்த லாக்டவுன் இன்று நள்ளிரவு முதல் வரும் 26-ந் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மலாக்கா, ஜோகூர், பினாங்கு, சிலாங்கூர், சாபா ஆகிய 5 மாநிலங்களிலும், கோலாலம்பூர், லபுவான், புத்ராஜெயா ஆகிய இடங்களில் நாளை முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு விதித்து மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் உத்தரவிட்டுள்ளார்.
அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் பயணம் செய்துகொள்ள அனுமதி விதிக்கப்பட்டுள்ளது
Tags: வெளிநாட்டு செய்திகள்