அயோத்தியில் மசூதி கட்டும் பணி வரும் ஜன 26ல் துவக்கம்
அட்மின் மீடியா
0
அயோத்தியில் மசூதி கட்டும் பணி வரும் ஜன 26ல் துவக்கம்
2021 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மசூதி கட்ட ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் அடிக்கல் நாட்டப்படும் என்று அறக்கட்டளையின் செயலாளர் அதர் உசேன் கூறியுள்ளார்
மசூதியின் சிறப்பம்சமாக, பல்துறை சிறப்பு மருத்துவமனை, சமூக சமையலறை மற்றும் நூலகம் ஆகியவை அடங்கும், இதற்கான வரைபடத்தை தலைமை கட்டிடக் கலைஞர் பேராசிரியர் எஸ் எம் அக்தர் இறுதி செய்துள்ள நிலையில் அதன் வரைபடம் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது எனவும் கூறியுள்ளார்
26ம் தேதி காலை 8 30 மணியளவில் அயோத்தியில் உச்சநீதிமன்றத்தால் ஒதுக்கப்பட்ட இடத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மற்றும் இந்திய தேசிய கொடியேற்றத்துடன் மசூதி கட்டும் பணி துவங்க உள்ளது.
Tags: இந்திய செய்திகள்