தமிழகத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் செய்தி வெளியிட்டுள்ளது அதன்படி....
3-ம் தேதி, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்
4ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்
5.1.2021 மற்றும் 6.1.2021 : கடலோர மாவட்டங்களில் ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை
http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf
http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf
Tags: தமிழக செய்திகள்