10 மாதங்களுக்கு பிறகு நாளை பள்ளிகள் திறப்பு: மாணவ மாணவியர்களே தயாரா!!!
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது
சுமார் 10 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு கொரோனா பரவலுக்கு இடையேயும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது
பொதுத்தேர்வு நெருங்குவதால் மாணவர்கள் தயாராக வேண்டும் என்ற நோக்கத்தில் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. இதனால் பெற்றோர் தயாராகி வருகின்றனர்.
பள்ளிகள் திறக்கப்படும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள் குறித்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கு மாணவர்கள் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது. விருப்பத்தின் பெயரில் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Tags: கல்வி செய்திகள்