BREAKING :சுங்கச்சாவடிகளில் FASTAG முறையை கட்டாயமாக்கப்படுவதை பிப்ரவரி 15க்கு ஒத்திவைத்தது மத்திய அரசு
நாளை முதல் இந்தியாவின் அனைத்து சுங்க சாவடிகளிலும் பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த உத்தரவை ஒத்திவைத்துள்ளது மத்திய அரசு.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்க சாவடிகளில் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இன்னமும் பல வாகனங்கள் பாஸ்டேக் வசதி பெறாமல் உள்ளன.
இதனால் நேரடி கட்டணம் செலுத்த ஒரு கவுண்டரும், பாஸ்டேக் மூலம் பணம் செலுத்த மற்ற கவுண்டர்களும் என சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜனவரி 1, 2021 முதல் நாடு முழுவதும் சுங்க சாவடிகளில் முழுமையாக பாஸ்டேக் முறையில் மட்டுமே கட்டணம் பெறப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் மத்திய அரசு பாஸ்டேக் பெறுவதற்கான அவகாசத்தை ஒரு மாத காலம் நீட்டித்து பிப்ரவரி முதலாக கட்டாய பாஸ்டேக் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளது.
Tags: இந்திய செய்திகள்