Breaking News

அரசு வாகனங்களில் 'பம்பர்' அகற்ற தலைமை செயலர் உத்தரவு

அட்மின் மீடியா
0

அரசு வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள, 'பம்பர்'களை உடனடியாக நீக்கும்படி, தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து, முதல்-அமைச்சர் அலுவலகம், அனைத்து அமைச்சர்களின் சிறப்பு தனி உதவியாளர்கள், அனைத்து அரசு செயலாளர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர்கே.சண்முகம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும், மத்திய மோட்டார் வாகன சட்டப்படியும், வாகனங்களில், பம்பர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத இதர அமைப்புகளை பொருத்துவது குற்றம்.


எனவே, வி.ஐ.பி.,யான முக்கிய பிரமுகர்கள், வி.வி.ஐ.பி.,க்களான மிக முக்கிய பிரமுகர்கள் ஆகியோரின் வாகனங்கள் உட்பட, அரசு வாகனங்களில் உள்ள பம்பர்களை உடனடியாக நீக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி, அனுமதியில்லா உதிரி பாகங்களான பம்பர் உள்ளிட்டவை தங்களது வாகனங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதா என்பதை அனைத்து அரசு அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும் என தலைமைச் செயலா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback