பிரிட்டனுக்கான விமான போக்குவரத்து தடையை மேலும் ஒரு வாரம் நீட்டித்தது மத்திய அரசு
அட்மின் மீடியா
0
பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த நாட்டுடனான விமான போக்குவரத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தற்காலிகமாக தடை செய்துள்ளன.
இந்தியாவில் டிசம்பர் 31ம் தேதி வரை விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பிரிட்டன் நாட்டுடனான விமான போக்குவரத்து தடை, ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்லார்
Tags: இந்திய செய்திகள்