Breaking News

தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் கன மழை வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் விழுப்புரம் உள்பட 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 




வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 

குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், ஏனைய வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது


வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை

 http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback