அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யப் போகும் மாவட்டங்கள்.. அறிவித்த வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29.12.2020 - 30.12.2020 : தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்களில் லேசான மழையும். வடக்கு உள் மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
30.12.2020 - 31.12.2020 : தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய அறிக்கை:
Tags: தமிழக செய்திகள்