ஜனவரி 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு.!
அட்மின் மீடியா
0
ஜனவரி 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு.!
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்ததால் கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, தற்போது வரை பல்வேறு தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளானது, ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது..
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்திற்கான ஊரடங்கு தளர்வு 7.0-வில் நடைமுறையில் இருந்த மெட்ரோ ரெயில் சேவை, கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி, திரையரங்குகள் செயல்பட அனுமதி, பள்ளிகள் திறப்பு, உணவகங்கள் செயல்பட அனுமதி உள்பட அனைத்தும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் எடுத்து கொரோனாவை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிக்கை
Tags: இந்திய செய்திகள்