Breaking News

ஆஞ்சநேயர் கோவிலுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லிம்

அட்மின் மீடியா
0

பெங்களூரு அருகே ஆஞ்சநேயர் கோவிலுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக முஸ்லிம் ஒருவர் வழங்கியுள்ளார். 




பெங்களூரு அருகே உள்ள காடுகோடி பெலதூர் காலனியில் வசித்து வருபவர் எச்.எம்.ஜி.பாஷா  அவருக்கு வயது 65  இருக்கு பெங்களூருவில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒசகோட்டே வலகேரபுராவில்  3 ஏக்கர் நிலம் உள்ளது. 

இதையொட்டி ஒரு வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது இந்த கோவிலுக்கு செல்ல பாதை இல்லாததால் பக்தர்கள் சிரமப்பட்டு சென்று வந்தனர்.

இதற்காக பாஷாவிடம் அனுகிய கோவில் நிர்வாகத்தினர் பாஷாவிடம்  1 செண்ட் இடம் கொடுத்தால் கோவிலுக்கு செல்ல வசதியாக இருக்கும் என கோரிக்கைவைத்தார்கள் 

அவர்கள் கோரிக்கையையை ஏற்றுக்கொண்ட பாஷா ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள தனது இடத்தில் 1.5 சென்ட் நிலத்தை கோவிலுக்கு தானமாக வழங்க முடிவு செய்தார். 

அதன்படி அவர் சந்தை மதிப்பில் ரூ.1 கோடி மதிப்பிலான 1.5 சென்ட் நிலத்தை வீர ஆஞ்சனேய சாமி கோவில் அறக்கட்டளைக்கு தானமாக எழுதி கொடுத்துள்ளார்.

ஆஞ்சநேயர் கோவிலுக்கு முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த பாஷா நிலம் வழங்கியதை பாராட்டி அந்தப் பகுதி மக்கள் வாழ்த்து பேனர் வைத்துள்ளனர். 

source:

https://www.thenewsminute.com/article/karnataka-village-muslim-man-donated-his-land-hanuman-temple-139195

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback