Breaking News

கல்பாக்கம் KV பள்ளியில் 4 ம் வகுப்பு படிக்கும் மாணவியின் கற்பித்தல் விளக்க முறையை பாராட்டிய பிரதமர் மோடி

அட்மின் மீடியா
0

 4 ம் வகுப்பு பள்ளி மாணவியின் கற்பித்தல் விளக்க முறையை  பாராட்டிய பிரதமர் மோடி 

 


கல்பாக்கம் நகரியத்தைச் சேர்ந்த அர்ஜுன் பிரதீப் - அபர்ணா தம்பதியின் மகள் இந்திரா அர்ஜூன் கேந்திரிய வித்யாலயா இரண்டாவது பள்ளியின் 4ம் வகுப்பு படித்து வருகின்றார்



கொரானா ஊரடங்கால்  வீட்டில் இருந்த மாணவி ஆகுமெண்டல் ரியாலிட்டி' ஆப் பயன்படுத்தி வீடியோ காட்சி முறையில் கற்பித்தல் முறையை உருவாக்கினார்.

 

அதில் வீட்டின் அறையில் இருக்கும் இந்திராவின் அருகில் பசு, யானை, புலி, பாம்பு மற்றும் தேனீ போன்ற உயிரினங்கள் வருவதைப் போல ஆஃகுமென்ட் ரியாலிட்டி தொழில்நுட்ப முறையில் காட்டப்படுகிறது.சிறுமி இந்திரா அந்த உயிரினங்கள் குறித்து ஆங்கில மொழியில் விளக்கிப் பேசுகிறார். இந்த வீடியோ பதிவை, பெற்றோர்களின் உதவியோடு சமூக வளைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

 

அந்த வீடியோவை பார்த்த நம் பாரத பிரதமர் தன் டுவிட்டரில் அந்த சிறுமியின் முயற்சியை பாராட்டிவாழ்த்தும் தெரிவித்துள்ளார்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback