Breaking News

FACT CHECK,: ஜனாசாவை கொத்தமல்லி மூலம் இரண்டுநாட்கள் கெடாமல் பாதுக்காக்கமுடியும் என்பது உண்மையா

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் இறந்தவர்களை ஐஸ் பெட்டியில் வைக்காமல் எப்படி பாதுகாப்பது.! இறந்தவர் உடலை சுத்தம் செய்த பிறகு கொத்தமல்லி தழையை அதன் வேர் பகுதியை துண்டித்து விட்டு அவரின் வயிற்றின் மேல் பகுதியிலும் இரண்டு அக்குலிலும் வைத்தால் இரண்டு நாட்கள் ஆனாலும் உடல் கெட்டுப் போகாமல் வாடை ஏதும் வராமல் இருக்கும் என்று அந்த பதிவில் இருக்கிறது.

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


நாம்  அனைவரும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே தெரியும்

இந்த தகவல் தவறானது என்று

மார்க்க ரீதியில் எப்படி தவறானது என்றால்

 இறந்தவர்களை அடக்கம் செய்ய தாமதிப்பதே அவர்களுக்கு நாம் கொடுக்கும் வேதனை தான் அப்படியிருக்க ஐஸ் பெட்டியில் வைப்பது என்பதும் வேறு வழிமுறைகளை பயன்படுத்தி தாமதப்படுத்துவதும் அவர்களுக்கு நாம் கொடுக்கும் வேதனை தான் என்பதை மறந்துவிடக்கூடாது.


அறிவியல் ரீதியில்

கொத்தமல்லி தழை மூலம் இறந்தவர்களின் உடலை பாதுகாக்கலாம்  என்பது தவறானது.

ஏனென்றால் கொத்தமல்லி தழையை அதன் வேர் பகுதியை துண்டித்து விட்டால் 1 மணி நேரத்தில் வாடி விடும் (அந்த கொத்தமல்லி வாடாமல் இருக்கவே நம்ம வீட்டில் பிரிஜ்ஜில் தான் வைத்துள்ளார்கள்)  என்பது நம் வீட்டில் உள்ள  பெண்களை கேட்டாலே  நம் அனைவருக்கும் நன்றாக தெரியும்

அதன் மூலம் இறந்தவர்களின் உடலை பாதுகாக்கலாம் என்பது அறிவியல் பூர்வமாகவும் தவறானது 

எனவே நாம் இறந்தவர்களை மிக விரைவில் அடக்கம் செய்ய வேண்டுமே தவிர எக்காரணம் கொண்டும் தாமதிக்கக் கூடாது.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

ஜனாஸாவை விரைந்து கொண்டு செல்லுங்கள்! அது நல்லதாக ‎இருந்தால் நல்லதை நோக்கி விரைந்து கொண்டு ‎சென்றவர்களாவீர்கள். கெட்டவரின் உடலாக அது இருந்தால் ‎உங்கள் தோள்களிலிருந்து கெட்டதை (சீக்கிரம்) இறக்கி ‎வைத்தவர்களாவீர்கள்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)‎

நூல்: புகாரி 1315


உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலை வீட்டில் ‎வைத்துக் கொண்டிருக்காதீர்கள். அவரது உடலை உடனே ‎கப்ருக்கு எடுத்துச் செல்லுங்கள்  என்று நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)‎

நூல்: தப்ரானி

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback