Breaking News

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு; தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண மையங்களுக்குச் செல்ல மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

அட்மின் மீடியா
0

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட உள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண மையங்களுக்குச் செல்லுமாறு, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.



பெருநகர சென்னை மாநகராட்சி இன்று (நவ. 25) வெளியிட்ட செய்தியில் 

செம்பரம்பாக்கம் ஏரியின் மிகைநீர் இன்று நண்பகல் 12 மணி அளவில் சுமார் 1,000 கன அடி அளவுக்கு வெளியேற்றப்பட உள்ளதால் கானு நகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான் பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அருகில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ளவும், மழைநீர் தேக்கம் மற்றும் இதர இடர்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்க பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகையில் உள்ள 


கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள். 

044-25384530, 

044-25384540. 

மற்றும் 

தொலைபேசி எண்.- 1913-லும், 

கோடம்பாக்கம்  மண்டலம் 9445190210 என்ற அலைபேசி எண்ணிலும், 

வளசரவாக்கம் மண்டலம் 9445190211 என்ற அலைபேசி எண்ணிலும், 

ஆலந்தூர் மண்டலம் 9445190212 என்ற அலைபேசி எண்ணிலும், 

அடையாறு மண்டலம்  9445190213 என்ற அலைபேசி எண்ணிலும் 

தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback