நிவர் புயல் எதிரொலி: பேனர்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு
சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நண்பகல் 12 மணிக்குள் பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி தீவிர புயலாக மாறியுள்ள 'நிவர்' இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'நிவர்' அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை, புதுச்சேரியில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இன்று நண்பகல் 12 மணிக்குள் பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது
நீதிமன்ற அனுமதியுடன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தாலும், அசாம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Announcement ⚠️
— Greater Chennai Corporation (@chennaicorp) November 25, 2020
As a precautionary measure to avoid any dangers during the cyclone, the owners are advised to remove all the hoardings/banners at the earliest before 12 pm today (25.11.2020)#நிவர்புயல்#Nivar #NivarCyclone #ChennaiRain
Tags: தமிழக செய்திகள்